லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி!

jammu kasmir

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், பாரமுல்லா ஆகிய இரு மாவட்டங்களில் நடந்த என்கவுன்ட்டரில் நேற்றிலிருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் உள்பட 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுபுவாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று காலை அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதலின் போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

இன்னும் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் நகரில் உள்ள ரேபான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப்படையினர், போலீஸார் நடத்திய தேடுதல் பணியில் போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் நடந்தது.

தீவிரவாதிகளை சரணடைந்துவிடுமாறு பாதுகாப்புப்படையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை மீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதால், அதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பில பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் மூன்று பேரில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களின் பெயர் அபு ரைபா என்ற உஸ்மான், சைபுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இதில் ரைபா கடந்த 2016-ம் ஆண்டிலிருந்தே காஷ்மீர் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டவர்.

கடந்த 1-ம் தேதி சிஆர்பிஎப் வீரர் மற்றும் சாமானியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்பட்டவர் சைபுல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு தீவிரவாதி பெயர் தெரியவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories