காதில் வாங்காத காதலன்! பேசுமாறு கெஞ்சியே.. கயிற்றில் தொங்கிய காதலி!

thukku 1

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர் அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்..

உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டுள்ளார்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு ரம்யா ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று தொடர்ந்து கெஞ்சி கேட்டது மட்டுமில்லாமல், நண்பர்கள் மூலமாகவும் பேச முயன்றுள்ளார்.

இப்படி தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. ஒருகட்டத்தில் சிவபார்கவி பேச மறுத்ததால், விரக்தியில் இருந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தனது அறைக்குள் துப்பட்டாவை கழுத்தில் மாட்டிகொண்டு அதனை வீடியோ எடுத்து, காதலனுக்கு அனுப்பி ஒருநிமிடம் மட்டும் தன்னிடம் பேசுமாறு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் காதலனிடம் இருந்து எந்த ரீபிளேயும் வராததால் நேரலையில் வீடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய அறைக்குள் சென்ற மகள் ரம்யா நீண்டநேரமாகியும் வெளியே வராத காரணத்தால் பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். இருப்பினும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரம்யா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரம்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில், சில வீடியோவும், காதலனுக்கு ரம்யா அனுப்பிய மெசேஜ்களும் இருந்ததால், வழக்குப்பதிவு செய்து சிவபார்கவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories