கொரோனா: பெட் இல்லை என மருத்துவமனைகள் மறுப்பு! மாணவன் உயிரிழந்த பரிதாபம்!

deadbody

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை 8.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் சில மருத்துவமனைகளில் நோயாளிகளை சிகிச்சை அனுமப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய சில உயிர்கள் மடிந்துள்ள சோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதேபோன்று சோக சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. சுப்ராஜித் என்ற 12-ம் வகுப்பு மாணவன் இளம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றுமுன்தினம்) காலை அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

கமர்ஹாத்தியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அவனை அழைத்துச் சென்றுள்ளனர். ஐசியூ வார்டில் பெட் இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்து அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அப்புறம் அவனை தனியார் நர்சிங் ஹோம் ஒன்று அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் எங்களிடம் பெட் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

அதன்பின் அரசு நடத்தும் சகர் தத்தா மருத்துவமனைககு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் கொல்கத்தா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை-க்கு (KMCH) அழைத்துச் செல்ல ஆலோசனை வழங்கியுள்ளனர்.

”அங்கு சென்றதும் எங்களது மகனுக்கு கொரோனா தொற்று இருந்தும் தொடக்கத்தில் அனுமதிக்க மறுத்தனர். எங்களது மகனை அனுமதிக்காவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என எனது மனைவி மிரட்டினார். அதன்பின் சேர்த்தனர்.

எனது மகனுக்கு அவர்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை. அவனை சில வார்டுகளுக்கு கொண்டு சென்றனர். நாங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவனுடைய உடல்நலம் குறித்து நாங்கள் விசாரித்த போது யாரும் எங்களுக்கு உதவவில்லை.

அதன்பின் விசாரணை பிரிவுக்குச் சென்றோம். அப்போது இரவு 9.30 மணியளவில் இறந்து போனதாக தெரிவித்தனர்” என்று அந்த மாணவனின் தந்தை சோகத்துடன் தெரிவித்தார்.

மேலும் ”எங்களது மகனை உரிய நேரத்தில் அனுமதித்திருந்தால், அவனது உயிரை கட்டாயம் காப்பாற்றியிருக்க முடியும். மெடிக்கல் கல்லூரியில் கூட எந்த சிகிச்சையும் கிடைக்கவில்லை” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories