வெமுலவாடாவில் சிராவண மாத கொண்டாட்டங்கள்! ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம்!

Published:

sriraja-rajeshwara-temple
sriraja-rajeshwara-temple

தெலங்காணாவில் பிரபல புண்ணியத்தலம் வெமுலவாடாவில் சிராவண மாதம் கொண்டாட்டங்களுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சிராவண மாதத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் உபவாச தீட்சையோடு பரமசிவனை தரிசிப்பார்கள்.

இந்த மாதம் 21ம் தேதியன்று சிராவண மாதம் தொடங்குவதால் பக்தர்களின் பெருமளவு கூட்டத்தை கணக்கில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தற்போது தெலங்காணா முழுவதும் கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்களின் தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

rajarajeswara-temple1
rajarajeswara-temple1

ஆன்லைனில் புக் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 300 பேர் வீதம் காலை 6.30 முதல் மாலை 5.30 வரை தரிசனம் ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் ஐடி துறைக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக ஆலய குழுவினர் தெரிவித்தனர்.

கொரோனா விஷயத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

பக்தர்களுக்கு முழு அளவில் ஸ்கேனிங் செய்த பிறகே ஆலயத்தில் அனுமதி அளிப்போம் என்று கூறினர்.

ஜுரம் இருமல் ஜலதோஷம் இருப்பவர்களை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தினர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img