ஹைதராபாத் கலெக்டருக்கு கொரோனா பாசிட்டிவ்!

Published:

hyderabad-collector-swetha-mahanthi1-1
hyderabad-collector-swetha-mahanthi1-1

ஹைதராபாத் நகரத்தில் கொரோனா கேசுகளின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது.

நகரத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் சீனியர் அதிகாரிகளும் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் கலெக்டர் ஸ்வேதா மஹந்தி கூட கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெலங்காணாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டெஸ்டுகள் பெருகிவரும் வேகத்தில் பாசிட்டிவ் கேசுகளும் கூட பெருகுகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் எத்தனை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும் வைரஸின் பரவுதலுக்கு மட்டும் அணைக்கட்டு விழவில்லை.

மாநிலத்தில் பல எம்எல்ஏக்கள் அரசியல் தலைவர்கள் உயரதிகாரிகள் கொரோனா வலையில் விழுந்து உள்ளார்கள்.

புதிதாக ஹைதராபாத் கலெக்டர் ஸ்வேதா மஹந்திக்கு கூட கொரோனா பாசிடிவ் என்று செய்தி. ஆனால் இந்த விஷயத்தை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.

அவருடைய டிரைவருக்கும் கலெக்டர் ஆபீசில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கும் கூட கொரோனா பாசிட்டிவாக உள்ளது.

இதுவரை ஹைதராபாத் கலெக்டர் அலுவலகத்தில் மொத்தம் 15 பேர் ஊழியர்கள் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது .

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
hyderabad-collector-swetha-mahanthi-1
hyderabad-collector-swetha-mahanthi-1

கடந்த சில நாட்களாக கலெக்டர் சுவேதா அலுவலகத்துக்கு வரவில்லை என்பது தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்காணாவில் 1676 பாசிடிவ் கேசுக்கள் பதிவாகியுள்ளன. ஜிஹெச்எம்சி எல்லையில் 788 கேசுகள் பதிவாகியுள்ளன.

ரங்காரெட்டி மாவட்டத்தில் 224, மேட்சலில் 160, கரீம் நகரில் 92, நல்கொண்டாவில் 64, சங்காரெட்டியில் 57, நாகர்கர்நூல் 30, மெதக் மாவட்டத்தில் 26 புது கேசுகள் பதிவாகியுள்ளன..

ஆந்திராவிலும் கோவிட் கேசுகள் மிக அதிக அளவில் பெருகி வருகின்றன.விசாகா கலெக்டரேட்டில் 22 பேர் ஊழியர்களுக்கு கோவிட் பாசிடிவ் வந்துள்ளது. அண்மைக்காலத்தில் விசாகா கலெக்டரேட்டில் 300 பேர் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img