பிரதமர் மோடியிடம் இருந்து வந்த போன்… மறுநாளே ஆளுநரை சந்தித்து பேட்டி அளித்த கேசிஆர்.,!

Published:

governor-tamilsai-and-cm-kcr
governor-tamilsai-and-cm-kcr
  • ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ராஜ் பவனுக்கு வந்த தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
  • பிரதமர் மோடியிடம் இருந்து போன் வந்த மறுநாளே கவர்னரோடு பேட்டி.

கொரோனாவை கட்டுப்படுத்துவது, சிகிச்சைகள் போன்றவற்றில் தெலங்காணா மாநிலம் தோற்றுவிட்டது என்று ஐகோர்ட்டு மற்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சில நாட்கள் முதலமைச்சர் யாருக்கும் தென் படாமல் போனது… அதே நேரத்தில் கவர்னர் ஆக்டிவாக கொரோனா பற்றி மீட்டிங்குகள் நடத்தியது, மாநிலத்தில் கவர்னரின் ஆட்சி, ஹைதராபாதில் செக்ஷன் 8 விதிப்பதற்கு டிமாண்ட் அதிகமாவது…. போன்ற பல பரிணாமங்களின் பின்னணியில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு முதல்வர் கேசிஆர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரையாடினார்.

governor-tamilsai-and-cm-kcr1
governor-tamilsai-and-cm-kcr1

கொரோனா கேசுகள் மீண்டும் மிக அதிக அளவில் பதிவாகி வரும் மாநிலங்களில் தெலங்காணா கூட இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறு அன்று இரவு திடீரென்று போன் செய்து முதலமைச்சர் கேசிஆரோடு பேசினார். தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது பரிசீலனை செய்தார். மோடியின் போன் கால் வந்த மறுநாளே கேசிஆர் ராஜ்பவன் வந்தது நிகழ்ந்தது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இறுதி முறையாக மாநிலம் தோன்றிய தினமான ஜூன் 2அன்று கவர்னரை சிஎம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அண்மையில் பல்வேறு பரிணாமங்களுக்குப் பிறகு இத்தனை நாள் கழித்து சந்தித்ததால் பலவித அம்சங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

செகரடேரியட் இடித்தல், புது கட்டடங்கள் நிர்மாணம் தொடர்பாக விவரங்களை முதல்வர் கேசிஆர் கவர்னருக்கு தெரிவித்தார் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவர்னர் கேள்வி கேட்டார் என்றும் மாநில வாரியாக எடுத்து வரும் நடவடிக்கைகளை கூட சிஎம் அவருக்கு தெரிவித்தார் என்றும் தெரிகிறது.

அதேபோல் கவர்னர் கோட்டாவில் உள்ள இரண்டு எம்எல்சி பதவிகள் குறித்து கூட சிஎம் கலந்துரையாடினார் என்று தெரிகிறது. ராஜ் பவனில் இருந்து மீண்டும் பிரகதி பவன் வந்த கேசிஆர் இரிகேஷன் துறை அதிகாரிகளோடு கலந்து பேசினார்.

தெலங்காணாவில் கொரோனா நிலைமை பற்றி திங்களன்று நடந்த விசாரணையில் ஐகோர்ட்டு தீவிரமாக விமர்சித்தது. அண்டை மாநிலமான ஆந்திராவில் டெஸ்டுகள் மிகவும் அதிகமாக செய்து வருகையில் இங்கு மற்றும் அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்றும் மக்களை இஷ்டத்திற்கு விட்டு விட்டார்கள் என்றும் கோர்ட் உத்தரவுகளை அமல் செய்வதில்லை என்றும் சீப் ஜஸ்டிஸ் தர்மாசம் சூடாக விமர்சனம் செய்தார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

தெலங்காணாவில் இதுவரை 2.65 லட்சம் டெஸ்டுகள் செய்துள்ளார்கள். 45 ஆயிரத்துக்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன. அதில் 32 ஆயிரத்து 438 பேர் இதுவரைக்கும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்கள். 12,324 ஆக்டிங் கேசுகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img