கொரோனா: தொற்று வந்தவர் இறந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பம்!

karnadaka-3

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், மருத்துவமனை ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பலருக்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி பகுதியை சேர்ந்த 55 வயதான நோயாளி ஒருவர் கடுமையான மூச்சுத்திணறலால் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியானது. ஆனால் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அலட்சியத்தால்தான் நோயாளி உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த ஆத்திரத்தில் மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸை தீயிட்டு அவர்கள் கொளுத்தினர். மேலும் மருத்துவமனை மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு காவலர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், பலரது உயிரையும் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆம்புலன்ஸை கொளுத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories