10 ஆண்டு சிறை: கண்ணீர் விட்ட ராம் ரஹீம்! பாதிக்கப்பட்ட பெண்கள் ஏமாற்றம்!

gurmeet ram rahim singh - 2026

பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங்க்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

முன்னதாக, தனக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் ராம் ரஹீம் கண்ணீர் விட்டு அழுது மன்றாடினார். மேலும், அவரது வழக்கறிஞரும், ராம் ரஹீம் சமூகப் பணிகள் பல செய்து வருவதால், அவருக்கு தண்டனையில் இருந்து வெளிவர கருணை காட்டுமாறு கோரினார். ஆனால், அரசுத் தரப்போ ராம் ரஹீமுக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த தண்டனை விவரம் குறித்து தங்களது மகிழ்ச்சியின்மையை பதிவு செய்தனர்.

ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று அறிவித்த போதே, பெரும் வன்முறை மூண்டது. 38 பேர் உயிரிழந்தனர். பெரும் கலவரத்தில் வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் ராம் ரஹீம் சிங் ஆசிரமம் இருக்கும் சிர்ஸா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories