விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில்… ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா!

Published:

vijayawada kanakadurga
vijayawada kanakadurga

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் கொரோனா பரபரப்பு.
ஆலய ஈஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.

தினமும் பக்தர்களால் களையோடு விளங்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலில் கொரோனா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று விதிகள் காரணமாக இரண்டரை மாதங்களுக்கு மேலாக கோவிலை மூடி வைத்திருந்த அதிகாரிகள் தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தளர்வுகளோடு மீண்டும் தரிசனத்தை ஆரம்பித்தார்கள்.

ஆனால் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அறிவித்திருந்தாலும் கூட கொரோனா பரவியதால் அதிலும் எண்ணிக்கையை மீண்டும் குறைத்தார்கள். இது இப்படி இருக்கையில் அண்மையில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் 18 ஊழியர்களுக்கு பாசிட்டிவ் வந்துள்ளதாக பரிசோதனைகள் தெரிவித்துள்ளன.

vijayawada kanakadurga
vijayawada kanakadurga

இன்று சிராவண மாத வெள்ளிக்கிழமை ஆனதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பிரத்தியேக பூஜைக்காக வந்திருந்ததால் கொரோனா அச்சம் மேலும் பெருகியது. கொரோனா வைரஸ் பரவல் கோவிலில் அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் வரவு மட்டும் குறையவில்லை.

அதனால் அதிகாரிகள் கூட என்ன செய்வதென்று தெரியாமல் மலைக்கும் நிலைமையே இங்கு. இவர்களை திருப்பி அனுப்ப முடியாத சூழலில் தரிசனம் நடத்தி வருவதாக தெரிகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதிகாரிகளோடு கூட ஊழியர்களுக்கும் கொரோனா பரவியிருப்பதால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்கும் விஷயம் குறித்து அரசாங்கத்தோடு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img