பத்தாம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர் உறவினர் சுவர் ஏறி தொங்கி உதவி

Published:

cheating-in-exams-bihar ஹாஜிபுர், பீகார்: பீகார் மாநிலம் ஹாஜிபுர், நோவாடா ஆகிய இடங்களில், தங்கள் வீட்டுக் குழந்தைகள் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு பிட் அடிக்க பெற்றோர், உறவினர்களே முயன்றனர். இதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை, தேர்வு நடைபெறும் கட்டத்தின் ஜன்னல் மீது ஏறியும், கம்பு கட்டித் தொங்கியும் ‘பிட்’ கொடுத்து உதவினர். பீகாரில் இந்தக் காட்சி ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்தமுறை மேலும் கூடுதலாகிவிட்டது. சென்ற முறை 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும்போது பிடிபட்ட 200க்கும் அதிகமானோர் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாக 10க்கும் அதிகமான பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு இருந்தும், சென்ற முறை தேர்வு எழுதிய 13 லட்சத்து சொச்சம் மாணவர்களில் 75% பேர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்தமுறை பீகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று  தேர்வு எழுதுகின்றனர். இதில், வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் தேர்வு நடைபெற்றபோது, பல மாடிகளைக் கொண்ட அந்தத் தேர்வு மைய கட்டத்தைச் சுற்றிலும் ஏராளமான பேர் நின்னர்.  பலர் அந்தக் கட்டடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு உள்ளே  தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு, ஜன்னல் வழியாக ‘பிட்‘களை வழங்கினர். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்துக் கொடுத்தனர். ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். சிலர் கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினர். தேர்வு அறைகளில் இருந்த பெரும்பாலான மாணவர்களும் ‘பிட்‘டோடுதான் தேர்வு எழுதினராம்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img