உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாகக் களம் இறங்கி முதலில் ஆடியது அந்த அணி, துவக்கத்தில் தடுமாறியது. முதல் இரண்டு விக்கெட்கள் 24 ரன்களைக் கடப்பதற்குள் விழுந்துவிட்டன. இதனால், அணியின் ரன் வேகம் பெரிதும் மட்டுப் பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேஷாத் 5 ரன்னிலும், அஹ்மத் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சொஹெல் 41 ரன் எடுத்தார். இதுதான் இன்று அணியில் எடுக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோர். அடுத்து மிஸ்பா உல் ஹக் 34 ரன் எடுத்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல் ரவுண்டர் அப்ரிதி 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு மிக எளிய இலக்காக 214 ரன்னை நிர்ணயித்தது.
பாகிஸ்தான் 213க்கு ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

