பெங்களூரில் பால் வாங்க சென்ற சிறுமியை கடத்தி தமிழ்நாட்டில் விட்டு சென்ற கும்பல்!

kidnapp

பெங்களூருவில் பால் வாங்கச் சென்றபோது கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்தவர் கணேசன்(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை கணேசன் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார். அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றார்.

அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் இருவர் சிறுமியிடம், ‘உனது தந்தைக்கு அடிபட்டுவிட்டது. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என்று கூறி அழைத்துள்ளனர்.

ஆனால், சந்தேகம் அடைந்த அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அவரையும் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த மர்ம நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி உள்ளனர். அப்போது, சிறுமி கூச்சலிட அவரது வாய் மற்றும் கையை கட்டிய அந்த நபர்கள் அங்கிருந்து தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், அவரை செங்கல்பட்டு அருகே திம்மவரம் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இடையில் என்ன நடந்தது என்பது உடனடியாக தெரியவில்லை.

திம்மாவரம் பகுதியில் அழுது கொண்டுநின்றிருந்த சிறுமியை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர்.அவர் தன்னை 2 பேர் அழைத்து வந்துஇங்கு இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும், ஆனால் அவர்கள் தனக்கு எந்ததொந்தரவும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுமத்திடம் இந்தப்பெண்ணை ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலை வந்து தனது மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories