February 22, 2026, 2:45 PM
30.4 C
Chennai

துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

மொஹரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்கக்கூடாது என்ற மம்தா பானர்ஜியின் உத்தரவை ரத்து செய்தது கல்கத்தா உயர்நீதிமன்றம். மேலும், மதசார்பின்மை என்றால் என்ன? என்று மம்தாவுக்கு பாடம் நடத்தியது கோல்கத்தா உயர்நீதிமன்றம். ஒரு மதத்தவரை திருப்தி செய்ய இன்னொரு மதத்தவரின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது என மம்தாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா சிலைகள் கரைக்கும் நிகழ்வு செப். 30ஆம் தேதி விஜயதசமி அன்று நடக்கிறது. மறு நாள் அக்டோபர் 1ஆம் தேதி மொஹரம் பண்டிகை வருவதால், செப்.30ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு துர்கை சிலைகளை கரைக்கக் கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த பூஜையின் இறுதி நாளில் சிலைக் கரைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து 3 விதமான வெவ்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று இவ்வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் திவாரி, சிலைக் கரைப்பு தொடர்பாக மம்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். “ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்று கற்பனை செய்து கொண்டு நீங்களாக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இரு மதங்களின் ஊர்வலத்தின் போது அமைதியைப் பேணிக் காக்க வேண்டியது போலீசாரின் கடமை. சிலைகளை அதிகாலை 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் கரைக்கலாம்” எனக் கூறினார்.

மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடக்கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆளும் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories