துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

மொஹரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்கக்கூடாது என்ற மம்தா பானர்ஜியின் உத்தரவை ரத்து செய்தது கல்கத்தா உயர்நீதிமன்றம். மேலும், மதசார்பின்மை என்றால் என்ன? என்று மம்தாவுக்கு பாடம் நடத்தியது கோல்கத்தா உயர்நீதிமன்றம். ஒரு மதத்தவரை திருப்தி செய்ய இன்னொரு மதத்தவரின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது என மம்தாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா சிலைகள் கரைக்கும் நிகழ்வு செப். 30ஆம் தேதி விஜயதசமி அன்று நடக்கிறது. மறு நாள் அக்டோபர் 1ஆம் தேதி மொஹரம் பண்டிகை வருவதால், செப்.30ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு துர்கை சிலைகளை கரைக்கக் கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த பூஜையின் இறுதி நாளில் சிலைக் கரைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து 3 விதமான வெவ்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று இவ்வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் திவாரி, சிலைக் கரைப்பு தொடர்பாக மம்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். “ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்று கற்பனை செய்து கொண்டு நீங்களாக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இரு மதங்களின் ஊர்வலத்தின் போது அமைதியைப் பேணிக் காக்க வேண்டியது போலீசாரின் கடமை. சிலைகளை அதிகாலை 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் கரைக்கலாம்” எனக் கூறினார்.

மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடக்கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆளும் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories