மோசடி புகார்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மீது போலீஸார் வழக்கு பதிவு

renuka-chaudriஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்திரி மீது, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி நாயக் என்பவரின் மனைவி கலாவதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், எனது கணவர் ராம்ஜிநாயக்குக்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் பெற்றுத் தருவதாக ரேணுகா சவுத்திரி ரூ.1.10 கோடி வாங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிட எனது கணவருக்கு டிக்கெட் பெற்றுத் தரவுமில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது இந்த மனவேதனையிலே எனது கணவர் மரணம் அடைந்து விட்டார். மேலும், அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட என்னை ரேணுகா சவுத்திரியும், அவரது ஆட்களும் சாதி பெயரை சொல்லி திட்டினர். இதுகுறித்து கம்மம் நான் நகர போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவோடு, ரேணுகா சவுத்திரிக்கு எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், நிதிமன்றம் ரேணுகா சவுத்திரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து அவர் மீது, மோசடி, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கம்மம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் மீது அரசியல் காழ்ப்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் ரேணுகா சவுத்ரி. அவர், இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கலாவதியின் ஆவணங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யச் சொன்னதால், ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories