மோசடி புகார்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மீது போலீஸார் வழக்கு பதிவு

renuka-chaudriஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்திரி மீது, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி நாயக் என்பவரின் மனைவி கலாவதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், எனது கணவர் ராம்ஜிநாயக்குக்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் பெற்றுத் தருவதாக ரேணுகா சவுத்திரி ரூ.1.10 கோடி வாங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிட எனது கணவருக்கு டிக்கெட் பெற்றுத் தரவுமில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது இந்த மனவேதனையிலே எனது கணவர் மரணம் அடைந்து விட்டார். மேலும், அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட என்னை ரேணுகா சவுத்திரியும், அவரது ஆட்களும் சாதி பெயரை சொல்லி திட்டினர். இதுகுறித்து கம்மம் நான் நகர போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவோடு, ரேணுகா சவுத்திரிக்கு எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், நிதிமன்றம் ரேணுகா சவுத்திரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து அவர் மீது, மோசடி, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கம்மம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் மீது அரசியல் காழ்ப்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் ரேணுகா சவுத்ரி. அவர், இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கலாவதியின் ஆவணங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யச் சொன்னதால், ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories