கனமழைக்கு… வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த பாம்புகள்!

Published:

snake-in-kadappa

கடப்பா மாவட்டத்தில் பெரும் மழை. வீடுகளுக்குள் பாம்புகள்.

கடப்பா மாவட்டம் கண்டிகோட்ட பிராஜெக்ட் தாழ்மட்ட இடங்களில் மக்கள் தீவிரமான தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிலைமை மோசமாகி விட்டது. தற்போது பெய்து வரும் பெரு மழையால் கண்டிகோட்ட ப்ராஜெக்டில் நீர் பெருமளவு வந்து சேருகிறது.

அதற்குள்ளே 12 டிஎம்சிக்கு மேலாக தண்ணீர் சேர்ந்து விட்டதால் தாழ்வான பகுதியில் இருக்கும் கிராமங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பாம்புகளும் தேள்களும் புழுக்களும் வீடுகளுக்குள் புகுகின்றன. இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

kadappa-flood

ஆனால் பேக் வாட்டர் அதிகமாகாமல் கண்டிகோட்ட அணையிலிருந்து பிற அணைகளுக்கும் அங்கிருந்து பென்னாநதி தாழ்மட்டப் பகுதிக்கும் நீரை அனுப்பு கிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். நீர் சேரும் இடங்களில் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.ட்

kadappa

” எங்கள் வீட்டுக்குள் பாம்பு வருகிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றால் வீட்டை காலி செய்து விட்டு போங்கள் என்று கூறுவது எவ்வாறு சரி?” என்று கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img