December 6, 2025, 10:21 AM
26.8 C
Chennai

மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!

MSSubbulakshmi
MSSubbulakshmi

ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

இசை என்னும் கலைக்கு மொழி ஒரு தடையில்லை. இசை என்பது, ரசிக்கும் மனதை எப்படியாயினும் ஆட்கொண்டு விடும். இசையின் ராணியாய் வலம் வந்து ரசிகர்களின் மனதை இன்றும் கொள்ளை கொண்டுள்ள எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளை நாக்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நினைவுகூர்கின்றனர்.

வெகு காலமாக மூன்று வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர்களுக்கும் இசை வகுப்புகளை எடுத்து வருபவரான திருமதி. ரஞ்சனி கிருஷ்ணகுமார் கூறுகையில் “பல மொழிகள் பேசும் மக்கள் ஆர்வத்தோடு நம் கர்நாடக இசையைப் பயில்கின்றனர். எம்.எஸ். அம்மா பாடிய ‘ரெங்க புரவிஹாரா’ , ‘அகிலாண்டேஷ்வரி’ மற்றும் ‘ குறை ஒன்றும் இல்லை’ இன்னும் பல பாடல்களை விருப்பத்துடன் கற்கின்றனர்,” என்றார்.

“எம்.எஸ். அம்மாவின் குரலில் ஹனுமான் சாலிஸாவும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் கேட்டு அனுபவிக்கும் போது, மனக் கவலைகள் மறந்து போகும்”, என்கிறார், மராட்டியரான திரு. ப்ரதீப் நாயிக்.

தெலுங்கு தேசத்தில் இருந்து நாக்பூர் வந்து தன் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் வேணு நாயுடு, ” பாரத ரத்னா எம்.எஸ். அம்மாவின் குரலில் ‘வேங்கடேச சுப்ரபாதம்’ தெலுங்கு, தமிழ் இல்லங்களில் காலை நேரத்தை ரம்யமாக்குகிறது,” என்பதை பெருமையுடன் கூறுகிறார்.

இசையில் விருப்பமுடைய இளைஞரான அபிஷேக் மோகன், ” பல மொழிகளில் பாடிய எம்.எஸ். அம்மா அவர்களின் வார்த்தை உச்சரிக்கும் திறமையானது அவருடைய பாடல்களை கேட்போருக்கு, வளரும் கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,” என்றார்.

அறுபது வருடங்களாக நாக்பூரில் வசித்து வரும் திருமதி. விசாலம் ராஜாமணி, தன் இல்லத்திற்கு நவராத்திரியின் போது வரும் மராட்டியப் பெண்கள், எம்.எஸ். அம்மாவின் சாதனையயும், அவரின் உடையலங்கார நேர்த்தியையும் புகழ்வர். ” நானும் அவர்களுக்கு எம்.எஸ். நீலக் கலர் புடவைப் பற்றி விளக்குவேன்,” என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

இசையின் ராணியான எம்.எஸ். அம்மா, மொழிகளைக் கடந்து என்றும் மனங்களை கவர்ந்தவர் என்பதற்கு நாக்பூர் இசைப் பிரியர்களின் சொல்லாலேயே வெளிப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories