மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!

MSSubbulakshmi
MSSubbulakshmi

ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

இசை என்னும் கலைக்கு மொழி ஒரு தடையில்லை. இசை என்பது, ரசிக்கும் மனதை எப்படியாயினும் ஆட்கொண்டு விடும். இசையின் ராணியாய் வலம் வந்து ரசிகர்களின் மனதை இன்றும் கொள்ளை கொண்டுள்ள எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளை நாக்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நினைவுகூர்கின்றனர்.

வெகு காலமாக மூன்று வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர்களுக்கும் இசை வகுப்புகளை எடுத்து வருபவரான திருமதி. ரஞ்சனி கிருஷ்ணகுமார் கூறுகையில் “பல மொழிகள் பேசும் மக்கள் ஆர்வத்தோடு நம் கர்நாடக இசையைப் பயில்கின்றனர். எம்.எஸ். அம்மா பாடிய ‘ரெங்க புரவிஹாரா’ , ‘அகிலாண்டேஷ்வரி’ மற்றும் ‘ குறை ஒன்றும் இல்லை’ இன்னும் பல பாடல்களை விருப்பத்துடன் கற்கின்றனர்,” என்றார்.

“எம்.எஸ். அம்மாவின் குரலில் ஹனுமான் சாலிஸாவும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் கேட்டு அனுபவிக்கும் போது, மனக் கவலைகள் மறந்து போகும்”, என்கிறார், மராட்டியரான திரு. ப்ரதீப் நாயிக்.

தெலுங்கு தேசத்தில் இருந்து நாக்பூர் வந்து தன் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் வேணு நாயுடு, ” பாரத ரத்னா எம்.எஸ். அம்மாவின் குரலில் ‘வேங்கடேச சுப்ரபாதம்’ தெலுங்கு, தமிழ் இல்லங்களில் காலை நேரத்தை ரம்யமாக்குகிறது,” என்பதை பெருமையுடன் கூறுகிறார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இசையில் விருப்பமுடைய இளைஞரான அபிஷேக் மோகன், ” பல மொழிகளில் பாடிய எம்.எஸ். அம்மா அவர்களின் வார்த்தை உச்சரிக்கும் திறமையானது அவருடைய பாடல்களை கேட்போருக்கு, வளரும் கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,” என்றார்.

அறுபது வருடங்களாக நாக்பூரில் வசித்து வரும் திருமதி. விசாலம் ராஜாமணி, தன் இல்லத்திற்கு நவராத்திரியின் போது வரும் மராட்டியப் பெண்கள், எம்.எஸ். அம்மாவின் சாதனையயும், அவரின் உடையலங்கார நேர்த்தியையும் புகழ்வர். ” நானும் அவர்களுக்கு எம்.எஸ். நீலக் கலர் புடவைப் பற்றி விளக்குவேன்,” என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

இசையின் ராணியான எம்.எஸ். அம்மா, மொழிகளைக் கடந்து என்றும் மனங்களை கவர்ந்தவர் என்பதற்கு நாக்பூர் இசைப் பிரியர்களின் சொல்லாலேயே வெளிப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories