December 6, 2025, 9:33 AM
26.8 C
Chennai

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட முதியவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

nagan-died-mhrdw
nagan-died-mhrdw

இளையான்குடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் முதியவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்டனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் .
இன்று கண்டனி கிராமத்தில் கால்வாய் தூர்வாரும் பணியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த நாகன் என்ற 61 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, பணியின்போது உயிரிழந்த முதியவர் நாகன் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது உடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்துகொண்டு பணியின் போது உயிரிழந்த நாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தமிழக அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை தொடர்ந்து இறந்த நாகன் உடலை அவரது இல்லத்திற்கு கிராம மக்கள் கொண்டு சென்றனர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories