கொரோனா: ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு!

suresh-angadi
suresh-angadi

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி (रेल राज्य मंत्री सुरेश अंगड़ी जी) கொரோனா பாதிப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

65 வயதாகும் மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கர்நாடகாவின் பெல்காவி தொகுதியிலிருந்து தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா பெல்காம் மாவட்டம் கேகே கொப்பாவில் சோமவ்வா, சின பசவப்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சுரேஷ் அங்கடி அரசியலில் படிப்படியாக முன்னேறினார். தற்போது பெலகாவி லோக்சபா தொகுதிக்கு பிரதிநிதியாக விளங்கும் சுரேஷ் 2004ல் இருந்து நான்கு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுரேஷ் அங்கடியின் மறைவு குறித்து அரசியல், திரைத்துறை, வணிகத்துறை பிரமுகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் கட்சியை வலிமையடைய செய்வதற்கு உழைத்த சிறந்த செயல் தொண்டராக அர்ப்பணிப்பு உள்ளத்தோடு எம்பியாக சிறப்பான சாமர்த்தியம் கொண்ட அமைச்சராக சுரேஷ் அங்கடி பணி புரிந்தார் என்று அவருடைய சேவைகளை பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.

சுரேஷ் அங்கடியின் மறைவு தன்னை தீவிரமாக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, சுரேஷ் அங்கடியின் குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories