கொரோனா: ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு!

Published:

suresh-angadi
suresh-angadi

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி (रेल राज्य मंत्री सुरेश अंगड़ी जी) கொரோனா பாதிப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

65 வயதாகும் மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கர்நாடகாவின் பெல்காவி தொகுதியிலிருந்து தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா பெல்காம் மாவட்டம் கேகே கொப்பாவில் சோமவ்வா, சின பசவப்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சுரேஷ் அங்கடி அரசியலில் படிப்படியாக முன்னேறினார். தற்போது பெலகாவி லோக்சபா தொகுதிக்கு பிரதிநிதியாக விளங்கும் சுரேஷ் 2004ல் இருந்து நான்கு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சுரேஷ் அங்கடியின் மறைவு குறித்து அரசியல், திரைத்துறை, வணிகத்துறை பிரமுகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் கட்சியை வலிமையடைய செய்வதற்கு உழைத்த சிறந்த செயல் தொண்டராக அர்ப்பணிப்பு உள்ளத்தோடு எம்பியாக சிறப்பான சாமர்த்தியம் கொண்ட அமைச்சராக சுரேஷ் அங்கடி பணி புரிந்தார் என்று அவருடைய சேவைகளை பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.

சுரேஷ் அங்கடியின் மறைவு தன்னை தீவிரமாக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, சுரேஷ் அங்கடியின் குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img