நீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்!

Published:

farmers-in-telangana

பட்டா இருந்தாலும் விவசாய நிலங்களை பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பட்டாவை புதுப்பித்துத் தர மறுக்கிறார்கள். ‘ரைத்து பந்து’ விவசாய உதவித் தொகையும் தருவதில்லை என்று தெலங்காணா மகபூபாபாத் மாவட்டம் பய்யாரம் மண்டலம் கஸ்தூரி நகரில் விவசாயிகள் ஹை டென்ஷன் மின்சார டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். 1500 ஏக்கரில் சென்ற அரசாங்கம் பட்டா கொடுத்தது. ஆனால் தற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று வருந்தினார்கள்.

தங்களது சோளப் பயிருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும். அதிகாரிகளும் தலைவர்களும் கண்டு கொள்வதில்லை. தமக்கு நீதி கிடைக்காவிடில் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மின்சார கோபுத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img