நாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

telangana-police-helping
telangana-police-helping
  • தெலங்காணா சித்திபேட்ட மாவட்டம் துப்பாக்க உப தேர்தல் பரபரப்பு.
  • ரகுநந்தன் உறவினர்கள் வீடுகளில் சோதனைகள்.

துப்பாக்க பை எலக்சன் பின்னணியில் ரெவின்யூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரகுநந்தன் ராவின் மாமா ராம் கோபால் ராவு மற்றும் ஒரு உறவினர் அஞ்சன்ராவு வீடுகளில் அதிகாரிகள் திங்களன்று சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த சோதனைகளில் அஞ்சன் ராவு வீட்டில் அதிகாரிகள் ரூ 18.67 லட்சம் கைப்பற்றினர்.

இந்த சோதனைகள் குறித்த செய்தி அறிந்த பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவு, அஞ்சன்ராவின் வீட்டுக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும் பிஜேபி நிர்வாகிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளில் ரகுநந்தன் மயங்கி கீழே விழுந்தார்.

அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை சிலவற்றை பிஜேபி ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தற்போது அங்கு பரபரப்பு தொடர்கின்றது. மறுபுறம் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சித்தி பேட்டை முனிசிபல் சேர்மன் ராஜநர்சு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

துப்பாக்க உப தேர்தலில் டிஆர்எஸ் தோற்றுப் போவது நிச்சயம் என்று தீர்மானித்த அமைச்சர் ஹரீஷ் ராவு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார் என்று பிஜேபி குற்றம் சாட்டுகிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் எப்படிப்பட்ட போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்காமல்…. அமைச்சர் உத்தரவுபடி ரகுநந்தன் ராவு வீட்டிலும் அவருடைய உறவினர்கள் வீட்டிலும் அவர்களுடைய அலுவலகங்களிலும் சோதனை என்ற பெயரில் தாக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் போலீசார் ரகுநந்தன் ராவு குடும்பத்தினரையும் உறவினர் களையும் பயத்திற்கும் கவலைக்கும் உட்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஒருபுறம் துப்பாக்க தொகுதியில் ரகுநந்தன் ராவை பிரசாரம் செய்ய விடாமல் போலீசாரோடு வந்து வீடுகளின் மீது தாக்குதல் செய்து வருகிறார்கள் டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள். மறுபுறம் துப்பாக்க வில் இஷ்டம் வந்தாற்போல் பணமும் மதுவும் விநியோகித்து வருகிறார்கள்.

போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories