23-03-2023 5:56 PM
More
    Homeஇந்தியாநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

    To Read in other Indian Languages…

    நாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’! அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்!?

    telangana-police-helping
    telangana-police-helping
    • தெலங்காணா சித்திபேட்ட மாவட்டம் துப்பாக்க உப தேர்தல் பரபரப்பு.
    • ரகுநந்தன் உறவினர்கள் வீடுகளில் சோதனைகள்.

    துப்பாக்க பை எலக்சன் பின்னணியில் ரெவின்யூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரகுநந்தன் ராவின் மாமா ராம் கோபால் ராவு மற்றும் ஒரு உறவினர் அஞ்சன்ராவு வீடுகளில் அதிகாரிகள் திங்களன்று சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த சோதனைகளில் அஞ்சன் ராவு வீட்டில் அதிகாரிகள் ரூ 18.67 லட்சம் கைப்பற்றினர்.

    இந்த சோதனைகள் குறித்த செய்தி அறிந்த பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவு, அஞ்சன்ராவின் வீட்டுக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும் பிஜேபி நிர்வாகிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளில் ரகுநந்தன் மயங்கி கீழே விழுந்தார்.

    அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை சிலவற்றை பிஜேபி ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தற்போது அங்கு பரபரப்பு தொடர்கின்றது. மறுபுறம் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சித்தி பேட்டை முனிசிபல் சேர்மன் ராஜநர்சு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

    துப்பாக்க உப தேர்தலில் டிஆர்எஸ் தோற்றுப் போவது நிச்சயம் என்று தீர்மானித்த அமைச்சர் ஹரீஷ் ராவு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார் என்று பிஜேபி குற்றம் சாட்டுகிறது.

    பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் எப்படிப்பட்ட போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்காமல்…. அமைச்சர் உத்தரவுபடி ரகுநந்தன் ராவு வீட்டிலும் அவருடைய உறவினர்கள் வீட்டிலும் அவர்களுடைய அலுவலகங்களிலும் சோதனை என்ற பெயரில் தாக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் போலீசார் ரகுநந்தன் ராவு குடும்பத்தினரையும் உறவினர் களையும் பயத்திற்கும் கவலைக்கும் உட்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

    ஒருபுறம் துப்பாக்க தொகுதியில் ரகுநந்தன் ராவை பிரசாரம் செய்ய விடாமல் போலீசாரோடு வந்து வீடுகளின் மீது தாக்குதல் செய்து வருகிறார்கள் டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள். மறுபுறம் துப்பாக்க வில் இஷ்டம் வந்தாற்போல் பணமும் மதுவும் விநியோகித்து வருகிறார்கள்.

    போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    nineteen − 6 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...