ஹைதராபாதில் களை கட்டும் ‘சதர் பண்டிகை’!

Published:

sadar-carnival
sadar-carnival

தீபாவளிக்கு மறுநாள் ஹைதராபாதில் உள்ள கைரதாபாதில் ஒவ்வொரு ஆண்டும்  ‘சதர்’ பண்டிகை எனப்படும் எருது ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள். இது யாதவ குலத்தின் பூர்வீகர்களின் வழிவழியாக வரும் சம்பிரதாயம்.

இந்த எருதுகனின்  சிறப்பு என்ன?  ‘சாம்பியன் புல்’ ரகத்தைச் சேர்ந்த எருதுகளை அதிகம் இந்த உற்சவத்தில் காணலாம். எருதுகளுக்கு பெயர்களும் ‘ராணா’ போன்ற வரலாற்று நாயகர்களின் பெயர்களாக இருப்பது சிறப்பு.

sadar-carnival1
sadar-carnival1

இவை ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரும்பாலும் வரவழைக்கப்படுகிறது.  தினமும் இந்த எருதுகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து கிலோ ஆப்பிள், கேரட், பச்சைப் புல், காலையில் 10 லிட்டர் பால், மாலையில் 10 லிட்டர் பால், சோளம், மாட்டுத்தீவனம், கொண்டைக் கடலை, வெல்லம்  போன்றவற்றை உணவாக இடுகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை நெய் உண்ணக் கொடுக்கிறார்கள். தினமும் 2 கிலோ மீட்டர் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடக்கும் உற்சவங்களுக்கு ‘ராணா’ என்ற ஹரியானா பிரீட் சாம்பியன் புல் எருதுராஜா பார்வையாளர்களை அதிகம் கவர்கிறது.

sadar-carnival2
sadar-carnival2

இதுவரையில் யாதவ சகோதரர்கள் சதுர் பண்டிகைக்காக  மட்டுமே ஹரியானாவில் இருந்து எருதுகளைக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. தற்போது உற்சவங்களுக்காக மட்டுமின்றி விவசாய முன்னேற்றத்திற்கும் உயர் ரக எருமைகளையும் உற்பத்தி செய்வதற்கும் இது போன்ற உயர்ரக எருதுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள். சொந்த மகனைப் போல் அன்போடு வளர்த்து பெருமையாக பண்டிகையின்போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்சவத்தை  நடத்துகிறார்கள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62 
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img