மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் ஓடிடி, செய்தி இணையதளங்கள்!

ministry-of-info-and-brodcasting
ministry-of-info-and-brodcasting

இனி மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள், செய்தி இணையதளங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த மாதம் OTT தளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், இதற்கான தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கலானது. அதை விசாரித்த நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு அரசு மற்றும் இன்டர்நெட்-மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

prakash javadekar
prakash javadekar

இந்த நிலையில் ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடும் ஓடிடி தளங்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

ஓடிடி தளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மட்டுமல்லாமல், ஆன்லைன் செய்தி இணையதளங்கள், செய்தி ஏஜென்சிகள் ஆகியவையும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தலைமையிலான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஆன்லைன் திரைப்படங்கள், டிஜிட்டல் செய்திகள் மற்றும் செய்தி ஏஜென்சிகளை கொண்டு வரும் உத்தரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்து இட்டுள்ளதாக அறிவிக்கபபட்டு உள்ளது.

இதன் மூலம், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இனி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.

இப்போது வரை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் எந்த சட்டமும் அல்லது தன்னாட்சி அமைப்பும் இல்லை.

இந்திய பத்திரிகை கவுன்சில் அச்சு ஊடகங்களை கவனித்துக்கொள்கிறது, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) செய்தி சேனல்களை கண்காணிக்கிறது. இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் விளம்பரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) திரைப்படங்களை கவனித்துக் கொள்கிறது.

online-media-under-govt
online-media-under-govt

இந்நிலையில், கடந்த மாதம், ஒரு தன்னாட்சி அமைப்பு மூலம் OTT தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கலானது,. அது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கோரியது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

OTT தளங்களில் செய்தி இணையதளங்கள் மற்றும் ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளும் அடங்கும், அவை இணையத்தில் அணுகக்கூடியவை அல்லது ஆபரேட்டர் நெட்வொர்க்கில் இயங்குகின்றன.

டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், வெறுக்கத்தக்க பேச்சை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்கும் முன் முதலில் ஒரு குழுவை நியமிக்கலாம் என்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு முன்னர் ஒரு தனி வழக்கில் கூறியிருந்தது நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories