மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் ஓடிடி, செய்தி இணையதளங்கள்!

ministry-of-info-and-brodcasting
ministry-of-info-and-brodcasting

இனி மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள், செய்தி இணையதளங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த மாதம் OTT தளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், இதற்கான தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கலானது. அதை விசாரித்த நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு அரசு மற்றும் இன்டர்நெட்-மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

prakash javadekar
prakash javadekar

இந்த நிலையில் ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடும் ஓடிடி தளங்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

ஓடிடி தளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மட்டுமல்லாமல், ஆன்லைன் செய்தி இணையதளங்கள், செய்தி ஏஜென்சிகள் ஆகியவையும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தலைமையிலான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஆன்லைன் திரைப்படங்கள், டிஜிட்டல் செய்திகள் மற்றும் செய்தி ஏஜென்சிகளை கொண்டு வரும் உத்தரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்து இட்டுள்ளதாக அறிவிக்கபபட்டு உள்ளது.

இதன் மூலம், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இனி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.

இப்போது வரை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் எந்த சட்டமும் அல்லது தன்னாட்சி அமைப்பும் இல்லை.

இந்திய பத்திரிகை கவுன்சில் அச்சு ஊடகங்களை கவனித்துக்கொள்கிறது, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) செய்தி சேனல்களை கண்காணிக்கிறது. இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் விளம்பரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) திரைப்படங்களை கவனித்துக் கொள்கிறது.

online-media-under-govt
online-media-under-govt

இந்நிலையில், கடந்த மாதம், ஒரு தன்னாட்சி அமைப்பு மூலம் OTT தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கலானது,. அது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கோரியது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

OTT தளங்களில் செய்தி இணையதளங்கள் மற்றும் ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளும் அடங்கும், அவை இணையத்தில் அணுகக்கூடியவை அல்லது ஆபரேட்டர் நெட்வொர்க்கில் இயங்குகின்றன.

டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், வெறுக்கத்தக்க பேச்சை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்கும் முன் முதலில் ஒரு குழுவை நியமிக்கலாம் என்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு முன்னர் ஒரு தனி வழக்கில் கூறியிருந்தது நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories