நான் யாரு தெரியுமா? என்கிட்டயே டோல் கட்டணமா?: ஊழியர் கன்னத்தில் அறைந்த ‘பெண்’ விஐபி.,!

andhra-lady-revathy-attacking-toll-plaza-worker
andhra-lady-revathy-attacking-toll-plaza-worker

டோல்கேட் ஊழியரை கன்னத்தில் அறைந்த ஆந்திரா கார்ப்பரேஷன் சேர்பர்சன் ரேவதி!

நான் யார் தெரியுமா? என்னையே டோல் கட்டணம் செலுத்த சொல்வாயா? எத்தனை தைரியம் உனக்கு? என்று பல விஐபிகள் அங்கிருக்கும் டோல்கேட் ஊழியர்களை மிரட்டுவது உண்டு. அதுமட்டுமின்றி அடி கூட கொடுப்பதுண்டு.

தாங்கள் விஐபிக்கள் என்றும் முக்கிய மனிதர்கள் என்றும் கட்டணம் செலுத்தாமல் சென்று விடுவதுண்டு. இவர்களைத் தடுத்து நிறுத்திய தவறுக்காக அவர்கள் கைகளால் அடிவாங்கிய ஊழியர்கள் அதிகம். தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது வெளிவந்துள்ளது. ஆந்திரா வட்டெர கார்ப்பரேஷன் சேர்பேர்சன் தேவள்ள ரேவதி வெறியாட்டம் ஆடினார்.

2020 டிசம்பர் 10ஆம் தேதி வியாழக்கிழமை காலை குண்டூர் மாவட்டம் காஜா டோல் கேட் வழியே அவர் காரில் சென்றுகொண்டிருந்தார். டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர் அவரிடம் கூறினார். உடனே அவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்தது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

நான் யார் என்று தெரியாதா? என்று கேள்வி கேட்டார். கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று ஊழியர்கள் கூறினர். டோல் கட்டணம் செலுத்தாமல் செல்ல இயலாது என்று அவரிடம் குறிப்பிட்டனர். ஆனால் ரேவதி காரை முன்னோக்கி செலுத்தும் படி ஓட்டுபவரிடம் கூறினார்.

டோல்கேட் ஊழியர் சாலைக்கு குறுக்காக தடுப்புகளை வைத்தனர். அவ்வளவுதான் அவருடைய கோபம் விண்ணை முட்டியது. காரிலிருந்து இறங்கி ஒரு பெரிய ஆட்டம் போட்டார். டோல்கேட் ஊழியரை வாயில் வந்தபடி திட்டி டோல்கேட் ஊழியருடைய கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். அதற்கு முன்பாக அறைந்து விடுவேன் என்று ஒருமுறை எச்சரித்தார் கூட.

அப்படியும் கேட்காமல் அவர் டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுக்காக தடுப்புகளை வைத்ததால் பெண்மணி ஆத்திரம் தாங்க முடியாமல் அந்த தடுப்புகளை எல்லாம் தானாகவே நகர்த்தி எறிந்தார். ஊழியர் மீண்டும் எடுத்து வைப்பதற்கு முயன்ற பொழுது பளாரென்று ஒரு அறை விட்டார். எத்தனை தைரியம் உனக்கு? என்று ஆத்திரமாக கேள்வி கேட்டார்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளன. ஊழியர் எது கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் மீது ஆத்திரத்தை காண்பித்தார். அங்கிருந்த பிற வாகனத்தில் வந்தவர்கள் வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில் போகட்டும் விடுங்கள்… பாதையை அடைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் சண்டை போடுவது என்று பிறர் வந்து தடுத்ததால் சிப்பந்திகள் ஒதுங்கினர். அந்தப் பெண்மணி வீரத்துடன் காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories