December 6, 2025, 12:52 AM
26 C
Chennai

நான் யாரு தெரியுமா? என்கிட்டயே டோல் கட்டணமா?: ஊழியர் கன்னத்தில் அறைந்த ‘பெண்’ விஐபி.,!

andhra-lady-revathy-attacking-toll-plaza-worker
andhra-lady-revathy-attacking-toll-plaza-worker

டோல்கேட் ஊழியரை கன்னத்தில் அறைந்த ஆந்திரா கார்ப்பரேஷன் சேர்பர்சன் ரேவதி!

நான் யார் தெரியுமா? என்னையே டோல் கட்டணம் செலுத்த சொல்வாயா? எத்தனை தைரியம் உனக்கு? என்று பல விஐபிகள் அங்கிருக்கும் டோல்கேட் ஊழியர்களை மிரட்டுவது உண்டு. அதுமட்டுமின்றி அடி கூட கொடுப்பதுண்டு.

தாங்கள் விஐபிக்கள் என்றும் முக்கிய மனிதர்கள் என்றும் கட்டணம் செலுத்தாமல் சென்று விடுவதுண்டு. இவர்களைத் தடுத்து நிறுத்திய தவறுக்காக அவர்கள் கைகளால் அடிவாங்கிய ஊழியர்கள் அதிகம். தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது வெளிவந்துள்ளது. ஆந்திரா வட்டெர கார்ப்பரேஷன் சேர்பேர்சன் தேவள்ள ரேவதி வெறியாட்டம் ஆடினார்.

2020 டிசம்பர் 10ஆம் தேதி வியாழக்கிழமை காலை குண்டூர் மாவட்டம் காஜா டோல் கேட் வழியே அவர் காரில் சென்றுகொண்டிருந்தார். டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர் அவரிடம் கூறினார். உடனே அவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்தது.

நான் யார் என்று தெரியாதா? என்று கேள்வி கேட்டார். கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று ஊழியர்கள் கூறினர். டோல் கட்டணம் செலுத்தாமல் செல்ல இயலாது என்று அவரிடம் குறிப்பிட்டனர். ஆனால் ரேவதி காரை முன்னோக்கி செலுத்தும் படி ஓட்டுபவரிடம் கூறினார்.

டோல்கேட் ஊழியர் சாலைக்கு குறுக்காக தடுப்புகளை வைத்தனர். அவ்வளவுதான் அவருடைய கோபம் விண்ணை முட்டியது. காரிலிருந்து இறங்கி ஒரு பெரிய ஆட்டம் போட்டார். டோல்கேட் ஊழியரை வாயில் வந்தபடி திட்டி டோல்கேட் ஊழியருடைய கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். அதற்கு முன்பாக அறைந்து விடுவேன் என்று ஒருமுறை எச்சரித்தார் கூட.

அப்படியும் கேட்காமல் அவர் டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுக்காக தடுப்புகளை வைத்ததால் பெண்மணி ஆத்திரம் தாங்க முடியாமல் அந்த தடுப்புகளை எல்லாம் தானாகவே நகர்த்தி எறிந்தார். ஊழியர் மீண்டும் எடுத்து வைப்பதற்கு முயன்ற பொழுது பளாரென்று ஒரு அறை விட்டார். எத்தனை தைரியம் உனக்கு? என்று ஆத்திரமாக கேள்வி கேட்டார்.

இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளன. ஊழியர் எது கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் மீது ஆத்திரத்தை காண்பித்தார். அங்கிருந்த பிற வாகனத்தில் வந்தவர்கள் வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில் போகட்டும் விடுங்கள்… பாதையை அடைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் சண்டை போடுவது என்று பிறர் வந்து தடுத்ததால் சிப்பந்திகள் ஒதுங்கினர். அந்தப் பெண்மணி வீரத்துடன் காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories