வலி தாங்க முடியாமல்… சாலையிலேயே பிரசவித்த பெண்!

Published:

woman-deliver-child-in-road
woman-deliver-child-in-road

பிரசவ வலி தாங்க முடியாமல் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலையிலேயே பெண் சிசுவை பிரசவித்தார்.

இந்த சம்பவம் கர்நூல் மாவட்டம் டோனில் நடந்துள்ளது. கொத்தபேட்டையைச் சேர்ந்த ஓபுலேசம்மா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்தால் குடும்பத்தினர் டோன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அவருக்கு சாதாரண பிரசவம் செய்விப்பதற்காக மருத்துவர் ஊழியர் முயற்சி செய்தார். ஆனால் ஓபுலேசம்மா பிரசவ வலி தாள இயலாமல் சாலைக்கு ஓடி வந்தார். ஆனால் சாலையிலேயே பிரசவம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த மருத்துவ ஊழியர் உடனே அவரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்ல முயற்சித்தார்.

அதற்கு அந்த கர்ப்பிணிப் பெண் மறுத்துவிட்டதால் மருத்துவர்கள் சாலையிலேயே அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஓபுலேசம்மா சாலையிலேயே பெண் குழந்தையை பிரசவித்தாள். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img