சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து

sasi-kapoorமும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான அவர், ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்தவர். கடந்த 1986–ம் ஆண்டு வெளியான ‘நியூ டெல்லி டைம்ஸ்’ என்ற படத்தில், தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய காரணத்தால், அவருக்கு அப்போது தேசிய விருது வழங்கப்பட்டது. 1993–ம் ஆண்டு வெளியான ‘முகாபிஸ்’ படத்துக்காக ‘சிறப்பு ஜூரி விருது’ மற்றும் 1979–ம் ஆண்டு வெளியான ‘ஜனூன்’ படத்துக்காக ‘தேசிய திரைப்பட விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். நடிகர் சசி கபூர் இந்திய சினிமா உலகுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ அறிவிக்கப்பட்டு உள்ளது. சசி கபூரின் தந்தை பிரிதிவிராஜ் கபூர், இந்தி திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த நடிகர் ராஜ் கபூர் (சசி கபூரின் சகோதரர்) ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, நடிகர் சசி கபூருக்கும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த விருதைப் பெற்றவர்கள் என்ற சாதனை படைக்கவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories