
இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிகள், சலுகைகள் இருக்கின்றன என்று கவாஸ்கர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு போட்டியில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்படுவார். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் பேட்ஸ்மென்களுக்கு இருப்பதில்லை என்று அஸ்வின் குறித்து அவர் குறிப்பிடுள்ளார்.
டி. நடராஜன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சில நாட்களிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானார். ஆனால் அவர் யுஏஇ.,யில் ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். அவர் இன்னும் தன் மகளை பார்க்கவில்லை. ஆனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தன் முதல் குழந்தை பிறக்கும் தருணத்தில் தன் மனைவியின் அருகே இருக்க வேண்டும் என இந்தியா சென்றுவிட்டார்… என்று குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.
ஆனால் அவரது கருத்துக்கு கோலியின் ரசிகர்கள் எதிர்க்கருத்து எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பான டிவிட்டர் பதிவுகள்…