கடலில் விழுந்து விபத்து: கடற்படை விமானிகள் 2 பேர் மாயம்

Published:

பனாஜி, தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். கோவாவின் கர்வார் பகுதியில் 10 மைல் தொலைவில் தாழப் பறந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். அதில் இருந்த கமாண்டர் ஜோஷி, அங்கிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு பேரைக் காணவில்லை. மாயமான கடற்படை அதிகாரிகளின் நிலை குறித்து தகவல் இல்லை. அவகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6-க்கும் மேற்பட்ட கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img