அதிர்ச்சி அளித்த காதலி

ஓராண்டாக திருமணத்தை தள்ளிப்போட்ட காதலன்… அதிர்ச்சி அளித்த காதலி.

ஓராண்டு காலமாக தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எத்தனை முறை கேட்டாலும் காதலன் கண்டுகொள்ளாமல் போனதால் காதலி போலீசாரின் உதவியை நாடினாள். அதனால் போலீஸார் ஸ்டேஷனிலேயே அவர்களுக்கு திருமணம் செய்வித்தனர்.

ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் என்ற பெயரை எடுத்த உடனேயே தப்பித்துக் கொண்டு அலைய ஆரம்பித்தான். காதலி அவனுக்கு அதிர்ச்சி அளித்தாள். காதலன் மீது போலீஸாரிடம் புகார் அளித்ததால் போலீஸ் ஸ்டேஷனிலேயே அவன் கையால் தாலி கட்ட வைத்தார்கள். இந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குர்ரபோடு மண்டலம் காசீராம் தண்டா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜடாவத் முனேஷ், மேகாவத் சாந்தி இருவரும்ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஓராண்டு காலமாக தன்னைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சாந்தி கேட்டு வந்தாலும் அவன் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். இதனால் சாந்தி கிராமத்தில் பெரிய மனிதர்களை கூப்பிட்டு பஞ்சாயத்து கூட செய்தாள். ஆனாலும் அவனில் மாற்றம் வராததால் கிராம பெரியவர்களின் ஆலோசனைப் படி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாள். போலீசார் கவுன்சிலிங் செய்வதற்கு அவனை அழைத்தார்கள். காதல் பெயரில் மோசம் செய்தால் சிறையில் தள்ளுவதாக எச்சரித்தார்கள். அதன்பின் அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். இருவருமே மேஜர் என்பதால் பெரிய மனிதர்களின் முன்னிலையில் போலீஸ் ஸ்டேஷனிலேயே மாலை மாற்றிக்கொண்டார்கள். அதன் பிறகு குடும்ப அங்கத்தினர்கள், கிராம பெரியவர்கள் முன்னிலையில் உள்ளூர் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் அவர்கள் இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராம சர்பஞ்ச் தத்ருநாயக் மங்லா, எஸ்ஐ சையது மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories