கணவனுக்கு ஊதியம் உயர்ந்தால் மனைவிக்கும் ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை: கோர்ட்!

court-1
court-1

விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியானாவில் பஞ்ச்குலாவில் வசிக்கும் வருண் ஜகோட்டா,இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளது. இவர் தனது மனைவிக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வருனின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தனக்கான ஜீவனாம்சம் தொகையை உயர்த்த வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர் வழங்கிவந்த ஜீவனாம்சம் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 28,000 ஆக வழங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் கூறியதாவது தனக்கான சம்பளம் ரூ .95 ஆயிரத்திலிருந்து ரூ .1 லட்சம் 14 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும்,பிடித்தம் போக ரூ.92,175 ஆகவும் இருக்கும் என்று தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.

தனக்கு கிடைக்கும் இந்த வருமானத்திலிருந்து எப்படி 28 ஆயிரம் ரூபாய் மாதம் வழங்க முடியும் என்று முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம் நீதிபதி எச்.எஸ்.மதன் விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு எனவும், இது சட்டங்களுக்கு எதிராகவும் ஒருசார் பக்கமாகவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories