புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி விடுவிப்பு! தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு!

puduchery-governor-issue
puduchery-governor-issue

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப் பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிவிப்பில், கிரண் பேடிக்கு பதிலாக, தமிழிசை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் அமைச்சர்களும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தெலங்காணா மாநில ஆளுநராக உள்ள டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளதற்கு, மாநில முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து, மூத்த அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோர் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஏற்கெனவே முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததும், ஆளுநரை மாற்ற வேண்டும் என்று சில தினங்களுக்கு முன் தில்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நாராயணசாமி வலியுறுத்தியதும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

அடுத்து சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories