December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

இன்னா செய்தாரை… இம்ரானுக்கு இந்திய வழி பறக்க அனுமதி!

imran khan
imran khan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முதலாக இலங்கை செல்ல உள்ள நிலையில், இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், இம்ரான்கானுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

paki-flight-1
paki-flight-1

இலங்கைக்கு முதல் முறையாக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாகச் செல்ல உள்ளார். அதற்கு இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது.

இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

modiji-speech
modiji-speech

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியும், அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையையும் ரத்து செய்தது. காஷ்மீரில் மனித உரிமைகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் அரசு முறைப் பயணமாகச் சென்றார். அதற்கு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கோரியபோது பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் செல்கின்றனர்.

இந்தப் பயணத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories