ஆபாசப் படம் பார்த்து ஆபத்தில் சிக்கிய விஐபிகள்!

Pornography-1
Pornography-1

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு புதிய ஆப் மூலம் ஆபாச படத்தை பல வி. ஐ. பி.க்களை பார்க்க வைத்து, அவர்களின் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து ,அதை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எடிட் செய்து பணம் பறித்துள்ளார்கள் .

மும்பையின் குற்றப்பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் இங்கிருக்கும் பல எம் .எல். ஏ. க்கள், மற்றும் எம் .பி. க்கள் மற்றும் பல முக்கிய புள்ளிகளைக் குறி வைத்து, ஆபாச படம் மூலம் பணம் பறிப்பதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் அவர்களை பிடிக்க ஒரு போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த படையினர் ரகசியமாக செயல்பட்டு அந்த கூட்டத்தை சேர்ந்த மூவரை கைது செய்தார்கள். அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

அந்த கூட்டம் முதலில் சமூக ஊடகத்தில் பல பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கியுள்ளார்கள். பின்னர் அந்த பெண்களின் போலியான நம்பரிலிருந்து பல அரசியல் புள்ளிகளுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து, அதில் ஆபாச படங்களை வெளியிட்டு அவர்களை பார்க்க வைத்துள்ளார்கள். அப்போது படம் பார்க்கும் அவர்களின் முக பாவனைகளை பதிவு செய்து விடுகின்றனர். பின்னர் ஆபாச படத்தில் இருக்கும் வீடியோவில் அவர்கள் இருப்பது போல எடிட் செய்து விடுகின்றனர். அப்படி போலியாக தயாரிக்கப்பட்ட அந்த ஆபாச வீடியோவை அந்த அரசியல் புள்ளிகளுக்கு அனுப்பி, அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்ப்தை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

cellphone speech - 2026

இப்படி அவர்களின் வீசிய வலையில் பல எம் .எல்.ஏ. க்கள், மற்றும் எம் .பி. க்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளார்கள். இந்த கூட்டம் மேலும் அதிக பணம் கறக்க மிரட்டலில் ஈடுப்பட்டதால் இப்போது போலீசில் சிக்கியுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories