December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

ராகுல் வலையில் சிக்காத மீன்கள்!

Rahul-1
Rahul-1

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். நேற்று (23.02.2021) விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குத் தலைமை தாங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி கேரளாவின் கொல்லம் பகுதியில் உரையாற்றினார்.
அப்போது அவர் மீனவர்களுக்காக மத்தியில் அமைச்சரவை அமைப்பேன் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தி, “விவசாயிகள் நிலத்தில் வேளாண்மை செய்வதுபோல், நீங்கள் கடலில் வேளாண்மை செய்கிறீர்கள். முதலில் நான் செய்ய வேண்டியது இந்திய மீனவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சகம். அதன்மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஆதரவாக இருக்கவும், உங்களைப் பாதுகாக்கவும் முடியும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில், மீனவர்களோடு பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, அவர்களோடு ஒருமணி நேரம் செலவழித்தார். அப்போது அவர் மீனவர்களோடு சேர்ந்து மீன்பிடிப்பிலும் ஈடுபட்டார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘இன்று அதிகாலையில், நான் என் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றேன். படகு சென்று திரும்பி வந்த தருணம் வரை, அவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள், வலையை வாங்குகிறார்கள்; ஆனால் வேறு யாராவது லாபம் பெறுகிறார்கள். நாங்கள் மீன் பிடிக்க முயற்சித்தோம், ஆனால் ஒன்று மட்டுமே கிடைத்தது. இதுதான் எனக்கு கிடைத்த அனுபவம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories