December 6, 2025, 11:28 PM
25.6 C
Chennai

தடுப்பூசி போட்டும் தொற்றால் உயிரிழந்த மருத்துவ மாணவர்!

corona-test
corona-test

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் நாலந்தா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அவருடன் பயிலும் சக 15 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 346 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியா பிரத்தியேகமாக 2 தடுப்பூசிகளை கண்டறிந்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது.

மார்ச் 1 முதல் இரண்டாவது கட்ட தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும், தடுப்பூசியால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்துவருகிறது.

ஆனால் இந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் பாட்னாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதாவது நாளந்தா மருத்துவ கல்லூரியை சேர்ந்த 23 வயதான இறுதியாண்டு மருத்துவ மாணவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாலந்தா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர் சுபேந்த் சுமன் (22), கடந்த 22 நாட்களுக்கு முன்பு தனது முதல் டோஸ் கோவாக்சின் மருந்தை எடுத்துக்கொண்டார். அவர் பிப்ரவரி முதல் வாரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டு நிலையில், பிப்ரவரி 25 அன்று அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டது. இதன் பின்னர் அவர் பெகுசாரில் உள்ள தனது வீட்டிற்கு ஓய்வெடுக்க சென்றார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு பாதிப்பு தீவிரமானதையடுத்து அவர் பிப்ரவரி 27 அன்று உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவர் உயிரிழந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது தடுப்பூசியின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ளது.

அதேபோல் அவருடன் பயிலும் 15 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி வைரசுக்கு எதிராக தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது. அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் வைரஸ் தொற்றால் மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories