மகனின் ஒரே அடியில் சுருண்டு விழுந்து தாய் மரணம்!

Published:

Scoring - 2026

தில்லியில் சாலை ஓரமாக 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தாயுடன் வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த அந்த நபர் தன்னுடைய கையால் பலமாக அவரை தாக்குகிறார். அவர் அடித்த ஒரே அடியில் சுருண்டு விழுந்துள்ளார் அவரது தாய்.

தனது மாமியார் கீழே சுருண்டு விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருமகள், அவரை எழுப்ப முயற்சிக்கிறார்.

ஆனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img