கிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண்! குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி!

muslim lady 7 1
muslim lady 7 1

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெஸ்னா சலீம். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

muslim lady 5
muslim lady 5

5 வருடங்களுக்கு முன் இவர் 2வது முறையாக கர்ப்பிணியாகி இருந்தார். அப்போது, வீட்டில் வைத்து வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இவர் முழு ஓய்வில் இருந்தார்.

muslim lady
muslim lady

அப்போது இவரது வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் ஒரு அறையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

தற்செயலாக அந்த அறைக்கு சென்றபோது ஒரு பழைய காகிதம் சுருட்டி வீசப்பட்ட நிலையில் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் கிருஷ்ணனின் ஒரு ஓவியம் இருந்தது.

muslim 7 1
muslim 7 1

அதை பார்த்ததும் ஜெஸ்னாவுக்கும்9 கிருஷ்ணனின் படத்தை ஓவியமாக வரைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பிறகு தான் ஜெஸ்னா கிருஷ்ணனின் ஓவியத்தை கண்ணாடியில் வரையத் தொடங்கினார்.

muslim 8 1
muslim 8 1

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், கிருஷ்ணனின் ஓவியங்கள் வரைவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இது குறித்து அறிந்த கேரள பாஜ முன்னாள் மாநிலத் தலைவரான கும்மனம் ராஜசேகரன், ஜெஸ்னாவை சந்தித்து கிருஷ்ணனின் ஒரு ஓவியத்தை வாங்கி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.

ஜெஸ்னா கடந்த சில வருடங்களாக சித்திரை விஷு தினத்தன்று குருவாயூர் கோவிலுக்கு சென்று, தான் வரைந்த கிருஷ்ணனின் ஓவியத்தை காணிக்கையாக வழங்கி வருகிறார்.

muslim 7
muslim 7

இந்த வருடமும் தன்னுடைய ஓவியத்தை காணிக்கையாக வழங்கினார். இது குறித்து ஜெஸ்னா கூறுகையில், ”கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கிருஷ்ணனின் படங்களை மட்டுமே ஓவியமாக வரைகிறேன்.

muslim 8
muslim 8

எனக்கு முதலில் இந்தியாவின் வரைபடத்தை கூட ஒழுங்காக வரையத் தெரியாது. இந்தத் திறமை எப்படி வந்தது என்று எனக்கு இதுவரை புரியவில்லை. முஸ்லிம் மதத்தை சேர்ந்த நான் கிருஷ்ணனின் படங்களை வரைவதற்கு தொடக்கத்தில் பல எதிர்ப்புகள் வந்தன. பின்னர் அவை அடங்கிப் போனது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories