பெற்றோர்களே ஜாக்கிரதை..! குழந்தைகளை குறி வைக்கிறதா கொரோனா!

children
children

இந்தியாவில்,கொரோனா 3 ஆம் அலையானது குழந்தைகளுக்கு அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா ஒரு கொடிய கொரோனா இரண்டாவது அலைகளின் தாக்கத்தினால் தற்போது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் புதன்கிழமையன்று இதுப்பற்றி கூறுகையில்,”வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மூன்றாம் கட்ட அலையானது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

ஆனால்,இந்த 3 ஆம் கட்ட கொரோனா அலை பரவலானது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே, புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்”, என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குழந்தைகளை மோசமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி,கொரோனா வைரஸின் முதல் அலையானது வயதானவர்களைத் தாக்கியது. அதன்பின்னர், கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில்,கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவலில் குழந்தைகள் அதிகம் பாதிககப்படுவர். அதுமட்டுமல்லாமல், இந்த கொரோனா 3 ஆம் அலையானது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.

எனவே,பெற்றோர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்காரணமாக,கனடாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது ‘ஃபைசர் பயோஎன்டெக்’ என்ற கொரோனா தடுப்பூசி வழங்க அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது,

மேலும் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை அடுத்த வாரத்திற்குள் அங்கீகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 12 வயதுக்குட்பட்ட 810 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories