April 19, 2025, 4:23 AM
29.2 C
Chennai

தந்தை இறக்க நீங்களே காரணம்.. பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த மகன்!

dr 2
dr 2

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் தான் காணப்படுகின்றனர். இருப்பினும் தங்களால் முடிந்த அளவு வரக்கூடிய நோயாளிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று பல மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், சிலர் தங்கள் உறவினர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுகின்றனர்.

இதேபோல கர்நாடகா மாநிலம் பெல்லாரி டவுனை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

ALSO READ:  திமுக., கொடி கட்டிய காரில் வந்து பெண்களைத் துரத்தி மிரட்டிய நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் டாக்டர் பிரியதர்ஷினி என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, உயிரிழந்த முதியவரின் மகன் திப்பேசாமி என்பவர் மருத்துவர் பிரியதர்ஷினியிடம் தனது தந்தைக்கு நீங்கள் உரிய சிகிச்சை அளித்து இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என வாக்குவாதம் செய்துள்ளார்.

இருப்பினும் முதியவரின் மகனை மருத்துவர் பிரியதர்ஷினி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த திப்பேசாமி பெண் மருத்துவரான பிரியதர்ஷினியை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அந்த நபர் மருத்துவரை தாக்கும் காட்சிகள் அந்த கொரோனா வார்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பெண் மருத்துவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் மருத்துவர் பிரியதர்ஷினியும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இந்த புகாரின் பேரில் திப்பேசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin - அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

மேலும் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜனார்த்தன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உறவினர்கள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப்பணியாளர்களாக மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரியதர்ஷினி மீது நடந்த தாக்குதல் மிக கண்டிக்கத்தக்கது எனவும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க: நித்யானந்தா!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories