கொரோனா: முக்கிய பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு!

teacher-3
teacher-3

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய கால் சென்டர்களில் பணிபுரிய அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்கள் அடிப்படையில் ஈடுபடுத்திட தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது நாளொன்றுக்கு 36 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தொற்றுக்கு ஆளானவர்கள், குணமானவர்கள் என இரு வகைப் பட்டவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனதைத் தேற்றவும், மனம் தைரியம் தரவும், அவர்களை உற்சாகமூட்டவும் நபர்கள் தேவைப்படுகின்றனர்.

அதே வேளையில் தமிழகத்தின் அரசு பள்ளி ஆசிரியர்கள் தற்போது பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், அதனால் அவர்களது ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிடப்பட்டுவந்தது.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்படுமா என்று முதலமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, அது வதந்தி என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களை, கட்டாயப்படுத்தாமல் அவர்களை கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு திங்கள்கிழமை முடிவுசெய்துள்ளது.

அதனையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 45 வயதுக்குள்பட்ட ஆசிரியர்களை, தன்னார்வலர்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளில் 45 வயதுக்குள்பட்டவர்களாகவும், அவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் எனவும், அவர்களில்
தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பிட அனைத்துக்கல்வி அதிகாரிகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலமும், மின்னஞ்சல் மூலமும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை மதியம் அனுப்பியுள்ளனர்.

தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ள ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரையும் மூன்றுவித கொரோனா பணிகளில் ஈடுபடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவனைகள், அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துதல், பொதுமுடக்கத்தினை மீறி வெளியே சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு அபராதம் விதித்தல், மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுத்துதல், கொரோனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து, கொரோனா நோயாளிளுக்கு தொலைபேசியில் ஆறுதலாக பேசுவது மூன்று வித பணிகளில் முக்கியமாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மேலும் கொரோனா விழிப்புணர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

இப்பணிகளுக்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் ஆகிய கல்வி அலுவலர்கள் மூலம் திங்கள்கிழமை, தன்னார்வலராக பணிபுரிய வேண்டிய ஆசிரியர்களது விவரம், வேகமாக சேகரிப்பட்டுவருகிறது. அந்தந்த மாவட்டங்களில் இதற்கான பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டவுடன் ஓரிரு நாட்களில் ஆசிரியர்களுக்கு பணிகள் வழங்கபட உள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால், 45 வயதுக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு இப்பணி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மே 24-ம் தேதி திங்கள்கிழமை, ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வீடுவீடாகச்சென்று கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறியும் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories