ஜம்மு காஷ்மீர்: புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் தீ விபத்து!

vaishnavi devi temple
vaishnavi devi temple

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோவிலுக்குள் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் வைஷ்ணவ தேவி குகைக்கோவில் அமைந்துள்ளது. இந்த குகைக் கோவில் புனிதமான இந்து சமய கோவில்களில் ஒன்று.

இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது. வட இந்தியாவில் போற்றப்படும் வழிபாட்டு தலங்களில் இந்த வைஷ்ணவி தேவி குகைக் கோவிலும் முக்கியமானது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5700 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் குளிர்கால தலைநகரமான ஜம்முவில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.

இந்த கோவிலில் நவராத்திரியின் போது ஒன்பது நாள் திருவிழா நடைபெறும். அப்போது இந்த ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஸ்தலத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்களின் தீவிர முயற்சியால் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்தார்.

கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories