புதுதில்லி: நிர்பயா – குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுப்பதற்காக, ஆவணப் படத் தயாரிப்பாளர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம். நவ்பாரத் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, லெஸ்லி உட்வின், முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க பல முறை முயன்றார்களாம். ஆனால், அது முடியாமல் போகவே, குல்லர் என்ற நபர் மூலம் திகார் சிறை நிர்வாகம் மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்தார்களாம். இந்தப் பேட்டிக்காக முகேஷ் சிங் 2 லட்ச ரூபாய் கேட்டானாம். ஆனால், இறுதியாக அந்த பேரம் ரூ.40 ஆயிரத்துக்கு படிந்துள்ளது. அந்தப் பணம் முகேஷ் சிங்கின் குடும்பத்துக்குச் சென்று சேர்ந்ததாக நவ்பாரத் டைம்ஸ் புலனாய்வு தெரிவிக்கிறது. இந்த ஆவணப் படம் இந்தியாவின் மகள் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வினின் தயாரிப்பு. ஆனால், இந்தப் படத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பும் சர்ச்சையும் எழுந்ததை அடுத்து ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது.
நிர்பயா- குற்றவாளியிடம் பேட்டி எடுக்க ரூ.40 ஆயிரம் கொடுத்தார்களாம்!
Popular Categories



