வங்கி கணக்கில் நடந்த மோசடி! பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி!

Published:

Rahul raj
Rahul raj

பிரபல மலையாள இசையமைப்பாளர் ராகுல்ராஜ் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள இசை அமைப்பாளர் ராகுல்ராஜ். திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று தற்செயலாக வங்கி கணக்கை பரிசோதித்தார்.

அப்போது அதில் ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ரூ.600, ரூ.700, ரூ.6000, ரூ.7000 என்று பல தவணைகளாக பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி அதிகாரியிடம் புகார் கொடுத்தார். விசாரணையில் பல்வேறு நாடுகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பணம் எடுக்கும்போது ஒடிபி எண்ணும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் உடனடியாக நிலுவைத் தொகையை வேறொரு கணக்கிற்கு மாற்றினார், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img