February 23, 2026, 1:28 AM
26.7 C
Chennai

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! ஏமாற்றி கூட்டி போய் கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai 1
vankodumai 1

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தாயாருடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக கோபித்துக் கொண்டு இனி வேறு எங்காவது சென்று தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

மும்பைக்கு வேலைக்கு செல்லும் திட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அச்சிறுமி, மும்பைக்கு எப்படி செல்வது என தெரியாமல் பரிதவித்திருக்கிறார்.

அப்போது சார்பாக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மடியோன் வந்த அச்சிறுமி, ரயில் நிலையத்துக்கு எப்படி செல்வது என அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டுள்ளார்.

இதனைப் பார்த்த இ-ரிக்‌ஷா ஓட்டுனரான இக்ரம்தீன் என்பவர் சிறுமியை அணுகி தனியாக இங்கு ஏன் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என விசாரித்திருக்கிறார்.

அப்போது தான் மும்பைக்கு வேலைக்காக செல்ல திட்டமிட்டிருப்பதையும் வீட்டை விட்டு வெளியே வந்ததையும் அச்சிறுமி இக்ரம்தீனிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதே ஊரிலேயே உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என உறுதியளித்து மடியோன் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இக்ரம்தீன்.

பின்னர் அன்று மாலை நண்பர்களை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரச்சொன்ன இக்ரம்தீன் அந்த 14 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து மீண்டும் வேறு ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி கண்டுபிடித்த போலீசார், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய இக்ரம்தீன், அவரின் நண்பர்கள் நசீம், ஷகீல், நூர் முகமது, உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் ஆகிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் 23 முதல் 27 வயதுடையோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories