கொரோனா: பிரபல நடிகை மகனை தொடர்ந்து கணவனையும் இழந்த சோகம்!

kavitha 1
kavitha 1

கொரோனா சிலர் வாழ்வில் ஆடும் கோரத் தாண்டவம் கொடுமையானதாக இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை கவிதாவின் மகன் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சோகம் மறையும் முன் நேற்று (29/6/21) அவரது கணவரும் உயிரிழந்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் இவரது கேரக்டர் மிகவும் முக்கியமானது.

kavitha
kavitha

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கியதுமே, ஷூட்டிங்கிற்கு பிரேக் எடுத்து விட்டு ஐதராபாத்தில் வீட்டோடு இருந்து வந்தார். முதல் அலை முடிந்து ஷூட்டிங் தொடங்கிய போது கவிதா ஷூட்டிங் வரவில்லை.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கி ஐதராபாத்தில் பலரும் பாதிக்கப்பட்ட போது, கவிதாவின் வீட்டிலும் அவரது மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானது.

மகனுடன் கவிதாவின் கணவர்
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் கவிதாவின் மகன் சாய் ரூப் கடந்த ஜூன் 15ம் தேதி இறந்து போனார்.

kavitha - 2026

அப்போது முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மரணமடைந்து விட்டார்.

பதினைந்து நாள்களுக்குள் நடிகை கவிதா இரண்டு உயிரை கொரோனாவுக்குப் பலி கொடுத்திருக்கும் சம்பவம் ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories