பெங்களூர் கலவர முக்கிய சதியாளன் எஸ்டிபிஐ.,யின் சையத் அப்பாஸ் கைது: என்.ஐ.ஏ., நடவடிக்கை!

bangalore1

பெங்களூரு: 2020 ஆகஸ்டில் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லையில் நடந்த கலவரத்தில் முக்கிய சதிகாரன் சையத் அப்பாஸ் (38) என்பவனை தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை கைது செய்தது.

அப்பாஸ் பெங்களூரு கோவிந்த்பூரில் வசிப்பவன். இந்த வழக்கு முதலில் ஆகஸ்ட் 12, 2020 அன்று கடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 2020 ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை கடுகொண்டனாஹள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே சட்டவிரோதமாக கூடியிருந்த கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒரு கட்டுக்கடங்காத கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

அந்த கும்பல் பல போலீஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியது. தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்துக்கும் தீ வைத்தது. காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீ வைக்கப் பட்டதில் பெரும் சேதமடைந்தன.

nia
nia

செப்டம்பர் 21, 2020 அன்று என்ஐஏ இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. முன்னதாக என்ஐஏ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 138 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சையத் அப்பாஸ், பெங்களூரு வார்டின் எஸ்.டி.பி.ஐ., கட்சியின்- நாகவராவின் தலைவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் பலர், எஸ்டிபிஐ., கட்சியின் உறுப்பினர்கள். அவர்களுடன் எஸ்டிபிஐ நகவாரா தலைவரான சையது அப்பாஸும் கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தீவிரமாக தாக்கி, வாகனங்களை எரித்துள்ளனர்.

பெங்களூரு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், கைதாகியுள்ள சையத் அப்பாஸை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, என்ஐஏவுக்கு அனுமதி வழங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories