December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

பெங்களூர் கலவர முக்கிய சதியாளன் எஸ்டிபிஐ.,யின் சையத் அப்பாஸ் கைது: என்.ஐ.ஏ., நடவடிக்கை!

bangalore1

பெங்களூரு: 2020 ஆகஸ்டில் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லையில் நடந்த கலவரத்தில் முக்கிய சதிகாரன் சையத் அப்பாஸ் (38) என்பவனை தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை கைது செய்தது.

அப்பாஸ் பெங்களூரு கோவிந்த்பூரில் வசிப்பவன். இந்த வழக்கு முதலில் ஆகஸ்ட் 12, 2020 அன்று கடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 2020 ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை கடுகொண்டனாஹள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே சட்டவிரோதமாக கூடியிருந்த கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒரு கட்டுக்கடங்காத கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

அந்த கும்பல் பல போலீஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியது. தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்துக்கும் தீ வைத்தது. காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீ வைக்கப் பட்டதில் பெரும் சேதமடைந்தன.

nia
nia

செப்டம்பர் 21, 2020 அன்று என்ஐஏ இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. முன்னதாக என்ஐஏ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 138 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சையத் அப்பாஸ், பெங்களூரு வார்டின் எஸ்.டி.பி.ஐ., கட்சியின்- நாகவராவின் தலைவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் பலர், எஸ்டிபிஐ., கட்சியின் உறுப்பினர்கள். அவர்களுடன் எஸ்டிபிஐ நகவாரா தலைவரான சையது அப்பாஸும் கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தீவிரமாக தாக்கி, வாகனங்களை எரித்துள்ளனர்.

பெங்களூரு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், கைதாகியுள்ள சையத் அப்பாஸை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, என்ஐஏவுக்கு அனுமதி வழங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories