ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

woman sliped in a moving train
woman sliped in a moving train
  • செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன்…
  • ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுந்த பெண்மணி…
  • பிறகு என்ன நடந்தது? வீடியோ வைரல்…

ரயில் ஓட்டம் எடுக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி பிளாட்பாரத்தில் ஓடிவந்தார். ஓட்டமாக ஓடிவந்து ஒரு போகியில் ஏறுவதற்கு முயற்சித்தார்.

ஓடும் ரயிலில் ஏறுவது என்பது மிகவும் ஆபத்தானது. இது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷனில் அறிவிப்பு கூட செய்திருப்பார்கள். ஆனால் சிலர் கடைசி நிமிடத்தில் ரயில் நகர ஆரம்பித்த பின்பு ஏற முயற்சிப்பார்கள். இவ்வாறு விபத்துக்கு ஆளானவர்கள் கூட உள்ளார்கள்.

இப்போதும் அதே போல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்த ஒரு பெண் கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாயின.

ஆனால் ரயில்வே போலீஸ் சரியான நேரத்தில் ஒரு உதவிக்கு ஓடி வந்து அவரை இழுத்து பிளாட்பாரத்தில் போட்டதால் பெரும் விபத்து தப்பியது.

இந்த சம்பவம் தெலங்காணாவில் உள்ள சிகிந்தராபாத் ரயில்வே ஸ்டேஷனில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளது.

இந்த வீடியோவில் ட்ரெயின் கிளம்பிய பின்பு ஒரு பெண் பிளாட்பாரத்தில் ஓடி வருகிறார். ஓட்டமாக ஓடி வந்து ஒரு பெட்டியில் ஏறுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் ரயில் நகர்ந்து கொண்டிருந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.

பிளாட்பாரத்தில் இருந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ் சிங் இதனை கவனித்து உடனடியாக அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். இந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் ரயிலை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதற்குள்ளாகவே அங்கு வந்து சேர்ந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ்சிங் அந்த பெண்ணை பிளாட்பாரத்தின் மீது பிடித்து இழுத்து கிடத்தினார்.

அதனால் அவர் உயிரோடு தப்பினார். அதன் பின் ரயில் நின்று போனது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் ஆர் பி எஃப் கான்ஸ்டபிளை பாராட்டினர். மிக வேகமாக உதவிக்கு வந்ததால் பெண் உயிர் காப்பாற்றப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories