சிங்கங்கள் கடித்துக் குதறியதில் உயிரியல் பூங்கா ஊழியர் படுகாயம்

bannerghatta-national-parkபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கடித்து குதறியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டாவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் ஊழியர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணப்பா (48)  தினமும்  வன விலங்குகளை பராமரித்து உணவுவழங்கி வருகிறார். நேற்று காலை 9.30 மணி அளவில் 4 வயது நகுல் என்ற ஆண் சிங்கத்துக்கு மாமிச உணவு வழங்கினார் கிருஷ்ணா. அப்போது கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம், கிருஷ்ணா மீது திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த  நேரத்தில் மற்றொரு சிங்கமும் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார் கிருஷ்ணா. அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள், அதிகாரிகள் ஓடிவந்து, உருட்டுக் கட்டையால் சிங்கங்களைத் தாக்கி விரட்டி கிருஷ்ணாவை மீட்டனர். கிருஷ்ணாவின் கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறியிருந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ள கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணாவின் உடல் நிலை குறித்து எதுவும் சொல்ல இயலாது. இன்னும் 48 மணி நேரத்துகுப் பின்னே அவரது உடல் நிலை பற்றி சொல்ல முடியும். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; ஊழியர்களை அடிக்கடி யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி வருகின்றன. சில நேரங்களில் ஊழியர்களை பாம்புகள் கடித்துள்ளன. நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தப் பூங்காவுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories