December 5, 2025, 11:45 PM
26.6 C
Chennai

திருப்பதியில் தொடங்கப்பட்ட புதிய நவநீத சேவை!

Thirupathi
Thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவநீத சேவை என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை துவங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், டோலோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஏகாந்த சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தினமும் நடத்தப்படுகின்றன.

இது தவிர விசேஷ பூஜை அபிஷேகம், திருப்பாவாடை சகஸ்ர கலசாபிஷேகம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகிய சேவைகள் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாட்களில் வாராந்திர சேவைகளாக நடத்தப்படுகின்றன.

இவை தவிர மாதாந்திர, வருடாந்திர சேவைகளும் ஏழுமலையானுக்கு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கோகுலாஷ்டமி தினமான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

Thirupathi vennai
Thirupathi vennai

இந்த சேவையில் கீர் பசுக்கள் ஆன நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணை பெறப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் அந்த வெண்ணை கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வெண்ணெயை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் பக்தர்களாகிய ஸ்ரீவாரி தொண்டர்கள் கோசாலையில் வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பக்தர்கள் தயாரித்த வெண்ணெய் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories