பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று ஆஜரானார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று தனது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று காலை 10:45க்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு நேரில் வந்த சுப்ரமணிய சாமி, தனது வாதத்தை எழுத்து பூர்வமாக, 14 பக்கங்களில் தாக்கல் செய்தார். இதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுப்ரமணிய சாமி தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்துக்கு இன்று மதியம் ஜெயலலிதா தரப்பு வழக்குரைனஞர்கள் பதில் அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படக்கூடும்.
பெங்களூரு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜர்
Popular Categories


