விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறும் ஓடத்தில் போட்டோ ஷுட்! மத உணர்வை புண்படுத்திய நடிகை கைது!

nimisha
nimisha

விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச்செல்லும் பிரபல ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் படகில் ஷூ அணிந்து ஏறி போட்டோ ஷூட் நடத்திய மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்து தான் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது.

இக்கோயிலில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள்.

கடும் விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இந்தப் படகில் செல்ல முடியும். இந்த படகு ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படகுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.

கோயில் நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்தப் படகுகள் ஆங்காங்கே ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள டிவி நடிகையான நிமிஷா என்பவர் படகில் ஏறி போட்டோ ஷூட் எடுத்தார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேன்ட்ஸ், டீ சர்ட் அணிந்தபடி இவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பின்னர் அந்த போட்டோக்களை சமூக வலை தளங்களில் அவர் வெளியிட்டார்.

பாரம்பரியமிக்க ஆரன்முளா கோயில் படகில் டிவி நடிகை நிமிஷா ஷூ அணிந்து ஏறி போட்டோ எடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்

. இதையடுத்து தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உண்ணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்காக நிமிஷா மற்றும் உண்ணி ஆகியோர் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories