December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறும் ஓடத்தில் போட்டோ ஷுட்! மத உணர்வை புண்படுத்திய நடிகை கைது!

nimisha
nimisha

விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச்செல்லும் பிரபல ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் படகில் ஷூ அணிந்து ஏறி போட்டோ ஷூட் நடத்திய மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்து தான் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது.

இக்கோயிலில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள்.

கடும் விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இந்தப் படகில் செல்ல முடியும். இந்த படகு ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படகுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.

கோயில் நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்தப் படகுகள் ஆங்காங்கே ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள டிவி நடிகையான நிமிஷா என்பவர் படகில் ஏறி போட்டோ ஷூட் எடுத்தார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேன்ட்ஸ், டீ சர்ட் அணிந்தபடி இவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பின்னர் அந்த போட்டோக்களை சமூக வலை தளங்களில் அவர் வெளியிட்டார்.

பாரம்பரியமிக்க ஆரன்முளா கோயில் படகில் டிவி நடிகை நிமிஷா ஷூ அணிந்து ஏறி போட்டோ எடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்

. இதையடுத்து தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உண்ணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்காக நிமிஷா மற்றும் உண்ணி ஆகியோர் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories